பாடல்
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
Puthiya Vaalvu Tharum Punitha Aaviyae
Fr. S. J. Berchmans
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே
இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா
வர வேண்டும் வல்லவரே
வர வேண்டும் நல்லவரே
தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா
– வர வேண்டும்
எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலை வெறுத்து வெறுத்து
என்றும் பண்பாடி மகிழணுமே – இந்த
– வர வேண்டும்
உலகம் எங்கிலும் சுவைதரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே
– வர வேண்டும்