நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

Puthiya Vaalvu Tharum Punitha Aaviyae

Fr. S. J. Berchmans

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

இருள் நிறைந்த உலகத்திலே

வெளிச்சமாய் வாருமையா

பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்

பரமனே வாருமையா

வர வேண்டும் வல்லவரே

வர வேண்டும் நல்லவரே

தடைகள் நீக்கும் தயாபரரே

உடையாய் வாருமையா

ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி

உற்சாகம் தாருமையா

– வர வேண்டும்

எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே

நிரம்பி வழியணுமே

மண்ணான உடலை வெறுத்து வெறுத்து

என்றும் பண்பாடி மகிழணுமே – இந்த

– வர வேண்டும்

உலகம் எங்கிலும் சுவைதரும் வெண்ணிற

உப்பாய் மாறணுமே

இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்

மரமாய் வளரணுமே

– வர வேண்டும்