பாடல்
பிரியமானவனே
Piriyamaanavanae
Fr. S. J. Berchmans
பிரியமானவனே (பிரியமானவளே) – உன்
ஆத்துமா வாழ்வது போல் – நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே(மகளே)
வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவி தரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு
– பிரியமானவனே
பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே
– பிரியமானவனே
ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே)
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)
– பிரியமானவனே