நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பிளவுண்ட மலையே

Pilavunnda Malaiyae

D.G.S. Dhinakaran

பிளவுண்ட மலையே

புகலிடம் ஈயுமே

பக்கம் பட்ட காயமும்

பாய்ந்த செந்நீர் வெள்ளமும்

பாவ தோஷம் யாவையும்

நீக்கும் படி அருளும்

எந்த கிரியை செய்துமே

உந்தன் நீதி கிட்டாதே

கண்ணீர் நித்தம் சொரிந்தும்

கஷ்ட தவம் புரிந்தும்

பாவம் நீங்க மாட்டாதே

நீரே மீட்பர் இயேசுவே

யாது மற்ற ஏழை நான்

நாதியற்ற நீசன் தான்

உம் சிலுவை தஞ்சமே

உந்தன் நீதி ஆடையே

தூய ஊற்றை அண்டினேன்

தூய்மையாக்கேல் மாளுவேன்

நிழல் போன்ற வாழ்விலே

கண்ணை மூடும் சாவிலே

கண்ணுக் கெட்டா லோகத்தில்

நடுத்தீர்வை தினத்தில்,

பிளவுண்ட மலையே

புகலிடம் ஈயுமே