நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே இயேசையா

Peththalaekam Oorinilae Piranthavarae Iyaesaiyaa

Sirkali Yesuprakasam

பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே இயேசையா

தாவீதின் வம்சத்திலே தாழ்மை ரூபம் கொண்டவரே

உம்மைப் போல உண்மை தெய்வம் உலகத்தில் இல்லையே

உண்மைகளை பாடிடுவேன் தினம் தினமே

வாழ்கின்ற வழிமுறையை வகுத்திட்ட எம் தேவா

வானமும் பூமியும் வாழ்த்து உம்மையே

வாக்கு மாறாத தேவா புது வாழ்வு வழங்குகின்ற நாதா

இதய வாஞ்சை அதை தீர்க்கும் எங்கள்

ஈடிணை இல்லாத ராஜா

தேவாதி தேவா உன் திருநாமம் போற்றியே

தினம் தினம் மகிழ்ந்திடுவேன்

– பெத்தலேகம்

ஜெபத்தினில் கேட்பவருக்கும் ஜெயத்தினை கொடுப்பவரே

வாழ்வும் வளர்வதும் உம் வரமே

உம்மை நினைக்கின்ற போது என்

உள்ளம் உருகுகின்றதய்யா

உருகி ஜெபிக்கின்ற போது என்

மனமும் மகிழ்கின்றதய்யா

எந்நாளும் மெய் தெய்வம் என் வாழ்வில்

நீர் தானே என்னென்றும் துதிப்பேனே

– பெத்தலேகம்