பாடல்
பயப்படாதே பாரில் இப்போதே
Payappadaathae Paaril Ippothae
பயப்படாதே பாரில் இப்போதே
திகையாதே கலங்காதே
தெரிந்து கொண்டேன்
பேர் சொல்லி அழைத்தேன்
அறிந்துகொண்டேன் நீ என்னுடையவன்
தண்ணீரை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நானிருப்பேன்
ஆறுகளை நீ கடக்கும் போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை
– பயப்படாதே
அக்கினியில் நீ நடக்கும் போது
அஞ்ச வேண்டாம் வேகாதிருப்பாய்
அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாது
விக்கினங்கள் ஏதும் சுற்றாது
– பயப்படாதே
இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே
இரட்சகரான தேவனே
உன்னை மீட்க நான் வந்தேனே
கண்மணி போல் அருமையானவனே
– பயப்படாதே
உன்னை நானே உருவாக்கினேன்
அன்னை போல ஆதரிப்பேனே
கண்ணை மூடாமல் காப்பேனே
சொன்னதை நிறைவேற்றுவேனே
– பயப்படாதே