பாடல்
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
Payanthu Karththarin Pakthi Valiyil
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்– 2
உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தன்னிழல் திராட்சக் கொடிபோல வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
– பயந்து கர்த்தரின்
ஒலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளம் கன்றுகள் போல
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வார் அன்பாலே
மிகவும் களித்து வாழ்வார் அன்பாலே– 2
– பயந்து கர்த்தரின்
கர்த்தர் உன் வீட்டைக் கட்டாவிடில் – அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
– பயந்து கர்த்தரின்