பாடல்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
Parvathangal Nilai Peyarnthaalum
Sirkali Yesuprakasam
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
என் கிருபை உன்னை விட்டு விலகாது
என்றுரைத்த என் இயேசுவே
உன் சொல் ஒருநாளும் உறங்காது
இரண்டோ மூன்றோ பேர்கள்
உம் நாமத்தில் இருக்கும்
இடத்தில் நீர் இருப்பீர்
இதயமோ உம்மை நினைத்திருந்தால்
இன்பமாம் ஆவியில் நிரப்பிடுவீர்
இன்னல் நீங்க உம்மை அழைத்தால்
அண்ணல் இயேசுவே நீர் வருவீர்
– பர்வதங்கள்
ஆறுகளை நான் கடக்கின்ற போதும்
அக்கினி என்னை சூழ்கின்ற போதும்
அங்கும் அருகே வந்திடுவீர்
அழிவின்றி என்னை தாங்கிடுவீர்
ஆண்டவர் இயேசு என்று
அழைக்கும் என் மனமே
அரவணைக்கும் உந்தன் அன்பு கரமே
– பர்வதங்கள்