நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்

Parvathangal Nilai Peyarnthaalum

Sirkali Yesuprakasam

பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்

என் கிருபை உன்னை விட்டு விலகாது

என்றுரைத்த என் இயேசுவே

உன் சொல் ஒருநாளும் உறங்காது

இரண்டோ மூன்றோ பேர்கள்

உம் நாமத்தில் இருக்கும்

இடத்தில் நீர் இருப்பீர்

இதயமோ உம்மை நினைத்திருந்தால்

இன்பமாம் ஆவியில் நிரப்பிடுவீர்

இன்னல் நீங்க உம்மை அழைத்தால்

அண்ணல் இயேசுவே நீர் வருவீர்

– பர்வதங்கள்

ஆறுகளை நான் கடக்கின்ற போதும்

அக்கினி என்னை சூழ்கின்ற போதும்

அங்கும் அருகே வந்திடுவீர்

அழிவின்றி என்னை தாங்கிடுவீர்

ஆண்டவர் இயேசு என்று

அழைக்கும் என் மனமே

அரவணைக்கும் உந்தன் அன்பு கரமே

– பர்வதங்கள்