பரலோகில் வாழும் கூட்டம் என்ன கூட்டம்
Paralokil Vaalum Koottam Enna Koottam
Moses Rajasekar
பரலோகில் வாழும் கூட்டம்
என்ன கூட்டம் – தேவ
பரமனையே போற்றிப் பாடும்
பக்கதர் கூட்டம்
அல்லேலூயா அல்லேலூயா என்ற
ஆடியே பாடும் கூட்டம்
அப்பன் இயேசு பக்கத்திலே
நின்றிடும் பக்தர் கூட்டம்
அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா – ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா – 2
இருபத்து நான்கு மூப்பர்
சூழ்ந்த கூட்டம் – என்றும்
சிரம் தாழ்த்தி தேவனையே பணியும் கூட்டம்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் கூட்டம்
ஓயாமல் சொல்லிப் பாடும்
தூதர் கூட்டம் – அம்மா
– பரலோகில்
ஆட்டுக்கு குட்டியானவரின்
இரத்தத்தாலே தம்மை
தோய்த்து வெளுத்த பரிசுத்தர் கூட்டம்
குருத்தோலை தங்கள் கையில் ஏந்திக் கொண்ட
ஓசன்ன்னா சொல்லிப் பாடும்
பக்தர் கூட்டம் – இயேசுவுக்கு
– பரலோகில்
மரித்தவர் முன்னோராக
எழுத்திருக்க – பின்பு
உயிரோடிருக்கும் நாமும் பறந்து செல்ல
தூதர் கண்களோடு வானில் தோன்றி – நம்மை
தம்மோடு சேர்க்கும் இயேசு
ராஜா கூட்டம்
– பரலோகில்