நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பகல்நேரப் பாடல் நீரே

Pakalnaerap Paadal Neerae

Fr. S. J. Berchmans

பகல்நேரப் பாடல் நீரே

இரவெல்லாம் கனவு நீரே

மேலான சந்தோஷம் நீரே

நாளெல்லாம் உமைப் பாடுவேன் – என்

எருசலேமே உனை மறந்தால்

வலக்கரம் செயல் இழக்கும்

மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்

நாவு ஒட்டிக் கொள்ளும் – என்

மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா

என் மணவாளரே உமை மறவேன்

கவலைகள் பெருகி கலங்கும் போது

மகிழ்வித்தீர் உம் அன்பினால்

கால்கள் சறுக்கி தடுமாறும்போது

தாங்கினீர் கிருபையினால்

– மகிழ்ச்சியின்

தாய்மடி தவழும் குழந்தைபோல

மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்

இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்

உம்மையே நம்பியுள்ளேன் – மகிழ்ச்சி

– மகிழ்ச்சியின்

பார்வையில் செருக்கு எனக்கில்லை

இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை

பயனற்ற உலகத்தின் செயல்களிலே

பங்கு பெறுவதில்லை

– மகிழ்ச்சியின்