பாடல்
பேசும் கர்த்தாவே
Paesum Karththaavae
Chandrasekaran
பேசும் கர்த்தாவே
உம் குரலை கேட்டிட
என் இதய பாரத்தை
பகிர்ந்திட வருகிறேன்
சாமுவேலுடன் அன்று
பேசியதை போலவே
இன்று என்னோடு பேசிடும்
வாஞ்சையோடு கேட்கிறேன்
மோசேயோடு பேசினீர்
ஜனத்தின் சிறையை மாற்றினீர்
எங்கள் தேச ஜனங்களின்
சிறையிருப்பை மாற்றிட பேசிடும்
யோவானோடு பேசினீர்
தேவ தரிசனம் தந்தீர்
இன்று உம் பாதம் அமர்ந்து நான்
வாஞ்சையோடு கேட்கிறேன்