நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாவியாகிய எந்தன் மேல்

Paaviyaakiya Enthan Mael

Chandrasekaran

பாவியாகிய எந்தன் மேல்

இரக்கம் காட்டுங்க

இறங்கி வாருங்க

உம் சமூகம் தேடி ஓடி வருகின்றேன்

என் கண்களை ஏறெடுக்க

துணியாமல்

வெட்கத்தோடு

தலைகுனிந்து தவிக்கிறேன்

என் கைகளை ஏறெடுக்க துணியாமல்

தூரமாக துக்கத்தோட நிற்கின்றேன்

– இரக்கம்

உம் பிள்ளைகள் போல

சுதந்திரமாய்

உலகில் வாழ

முடியாமல் பாவத்தோடு நிற்கிறேன்

உம் பிள்ளைகளோடு இணைந்து

உம்மை ஆராதிக்க

வாஞ்சை இருந்தும்

முடியாமல் தவிக்கிறேன்

– இரக்கம்

நான் ஆயக்காரனாய் இருந்தாலும்

நீர் என்னை உண்டாக்கிய

தேவன் ஒருவரே எனக்காகவே

இயேசுவையே அனுப்பினீர்

என் பாவம் நீக்கிப்

புது வாழ்வை தாரும்

– இரக்கம்