நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாவ இருளில் தடுமாறி

Paava Irulil Thadumaari

Chandrasekaran

பாவ இருளில் தடுமாறி

அலைந்தேன் நான்

ஜீவ ஒளியை காட்டி என்னை மீட்டாரே

உம் கண்களில் கண்ணீரை

கண்டேன் என் இயேசுவே – 2

மரண இருளின் பாதையிலே

பாவி நானும் நடந்து சென்றேன்

இரக்கம் காட்டி அழைத்தவரே

இரத்தம் சிந்தி மீட்டவரே

உம் கரத்திலே காயங்கள்

கண்டேன் என் இயேசுவே – 2

– பாவ இருளில்

ஆபத்து காலத்தில் தூக்கியென்னை

ஆறுதல் தந்த அன்பின் தெய்வமே

கலங்கிடாதே என்றவரே

கரத்தை நீட்டி அணைத்தவரே

உம் விலாவிலே காயங்கள்

கண்டேன் என் இயேசுவே – 2

– பாவ இருளில்

ஆறுகளை நான் கடந்து சென்றேன்

அவைகள் என் மேல் புரளவில்லை

அக்கினி ஜீவாலை எந்தனின் மேல்

அவியாமல் நீர் பாதுகாத்தீர்

உம் கால்களில் காயங்கள்

கண்டேன் என் இயேசுவே – 2

– பாவ இருளில்