பாடல்
பாழாய் கிடந்த தேசம்
Paalaay Kidantha Thaesam
Lucas Sekar
பாழாய் கிடந்த தேசம்
ஏதேனைப் போல ஆனதே
மகிழ்ச்சியும், சந்தோஷமும்.
துதியும் கீத சத்தமும்
எங்கும் கேட்குதே
கர்த்தர் சீயோனுக்கு
ஆறுதல் செய்தார்
அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம்
தேறுதலடையச் செய்தாரே
அதின் வனாந்திரத்தை
ஏதேனைப் போலாக்கினார்
அதின் அவாந்திர வெளிகள்
கர்த்தரின் தோட்டம் போல் ஆனதே
மகிழ்ச்சியும்
பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படுதே
மலைகள் குன்றுகள் தாழ்த்தப்படுதே
கோணலானவை செவ்வையாகுதே
கரடு முரடுகள் வழியாய் மாறுதே
– மகிழ்ச்சியும்
சீயோன் சிறை மாறிப்போகுதே
சொப்பனம் காண்பதைப் போல ஆகுதே
கர்த்தர் பெரியக் காரியம் செய்தார்
புறஜாதிகள் சொல்லக் கேட்குதே
– மகிழ்ச்சியும்