பாடல்
ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர்
Oli Muka Vaasalil Oliyaay Iruppavar
Moses Rajasekar
ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர்
வானத்திலிருந்து ஒளியாய் என்னைக் காண வந்தார்
என்னைக் கண்டதும் கட்டியணைத்தாரே
அவரின் மார்பில் சாய்ந்தவுடன் –
ஆறுதல் வந்ததே
என் துக்கங்கள் மறைந்ததே – (2)
தாயைப் போல தேற்றினார்
தந்தையைப் போல அணைத்திட்டார்
சிநேகிதனைப் போல என்னோடு பேசினார்
அவர் பேசும் பொழுதே
என் இதயம் ஏக்கமெல்லாம் நிறைவேறியது
அவர் பாதம் பணிந்தேன்
– ஒலி முக வாசலில்
போதகரைப் போல போதித்து நடத்தி
நான் நடக்க வேண்டிய
பாதையை கண்டித்துணர்த்தி
என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றீரே
அவரின் பாதைகள் எவ்வளவு அருமை
– ஒலிமுக வாசலில்