நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நித்திய கன்மலை எனக்காய்ப்

Niththiya Kanmalai Enakkaayp

நித்திய கன்மலை எனக்காய்ப் - பிளந்தது,

நேயமாய் மறைந்துய்குவேன்

சுத்த உதிரமும் நீரும் வடிந்தது

தூயன் விலாவினின்று - அதால்

சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்

சுகமாக வாழ்வேனே

– நித்திய

என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு

ஈடு நான் செய்வதில்லை - தினம்

சிந்துகினுங் கண்ணீர், ஏதேது

செய்கினும் தீங்கு நீங்குவதில்லை

– நித்திய

கொண்டுவரக் கையிலொன்று

மில்லை, உன்

குருசுடன்றான் ஒன்றினேன் - குருதி

கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்

கோவே; அல்லாதுய்ந்திடேன்

– நித்திய

ஜீவனிருக்கையில், சாவில் கண்

மூடுகையில்,

தெரியாவுலகிற் செல்கையில் - ஒளி

மேவு பத்ராசன மீதுனைக் காண்கையில்

விரைந்துனில் மறைந்துய்குவேன்

– நித்திய