நீதிமான் மரித்துப் போகிறான்
Neethimaan Mariththup Pokiraan
Moses Rajasekar
நீதிமான் மரித்துப் போகிறான்
அதை நினைவில் வைக்க ஒருவருமில்லை
நல்லவன் கடந்து போகிறான் – அவன்
நலம் கேட்க ஒருவருமில்லை
இது பொல்லாத காலம்
இது பொல்லாத காலம்
– நீதிமான்
ஞானவான் நலிந்து போகிறான் – அவன்
ஞானம் ஒன்றும் எடுபடவில்லை
கனவான் கடந்து போகிறான் – அவன்
கனம் ஒன்றும் எடுபடவில்லை
இது பொல்லாத காலம்
இது பொல்லாத காலம்
– நீதிமான்
பலவான் பயந்து போகிறான் – அவன்
பலமொன்றும் எடுபடவில்லை
தனவான் தணிந்து போகிறான் – அவன்
பணம் ஒன்றும் எடுபடவில்லை
இது பட்சிக்கும் காலம்
தேவ திட்சையின் காலம்
– நீதிமான்
ஏழை ஒடுக்கப்படுகிறான் அவன்
ஏழ்மை என்றும் மறைவதில்லையே
தேவனின் மறைவில் வாழ்பவன்
என்றும் நிம்மதியாய் வாழ்ந்திடுவான்
இது இரக்கத்தின் காலம்
தேவனை அறிந்திடும் காலம்
– நீதிமான்
கிருபையின் காலம்
இயேசுவை அறிந்திடும் காலம்
இரட்சிப்பின் காலம்
பரலோகம் சேர்ந்திடும் காலம்