நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீர் எந்தன் தந்தை நான் உந்தன் பிள்ளை

Neer Enthan Thanthai Naan Unthan Pillai

Sirkali Yesuprakasam

நீர் எந்தன் தந்தை நான் உந்தன் பிள்ளை

நமக்குள்ள உறவில் பிரிவேது

அப்பா என்று உம்மை நான் அழைக்கின்ற போது

தப்பாமல் வந்து துணையிருப்பீர்

தப்பாமல் வந்து துணையிருப்பீர்– நீர்

இயேசுவின் நாமத்தில் விசுவாசம் வைத்து

உம்மை ஏற்றுக்கொண்டோர் எல்லாம் உம் பிள்ளையல்லவா

இரத்தத்தால் அல்ல மாம்ச சித்தத்தால் அல்ல

ஆவியால் எம்மை பெற்ற அன்பு தெய்வமே

ஆவியால் எம்மை பெற்ற அன்பு தெய்வமே

– நீர்

பாய்ந்தோடும் நதிகள் பலவழி சென்றாலும்

சேர்ந்திடும் சமுத்திரம் நீர் அல்லவா

பாவத்தின் சகதியில் அமிழ்ந்திட்ட மாந்தரை

தூக்கி எடுப்பதும் உம் கரம் அல்லவா

தூக்கி எடுப்பதும் உம் கரம் அல்லவா

– நீர்

யார் எந்தன் மீது குறை சொன்ன போதும்

நீர் என்னை முற்றும் அறிந்தவரே

பெயர் சொல்லி அழைத்தீர் புகலிடம் அளித்தீர்

வேறெங்கு சென்று நான் வாழ்ந்திடுவேன்

வேறெங்கு சென்று நான் வாழ்ந்திடுவேன்

– நீர்