பாடல்
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்
Nee Uyirotirukkum Naalellaam
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்
ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை
நான் மோசேயோடே இருந்ததுப்போல்
உன்னோடு இருப்பேன் என் மகனே
உன்னோடு இருப்பேன் என் மகளே
திகையாதே கலங்காதே
திகையாதே கலங்காதே
நீ போகும் இடமெல்லாம் வருவேன்
நீ போகும் இடமெல்லாம் வருவேன்
தாய் தன் சேயை மறந்து போனாலும்
நான் உன்னை மறப்பதில்லை
துன்பத்தால் பாரத்தால் நசுக்குண்டு
போகையில் அடைக்கலமாய் இருப்பேன்
– திகையாதே
உன் ஜெபத்தை தள்ளாமல்
கிருபையை விலக்காமல்
நான் உன்னை தாங்கிடுவேன்
தீயையும் தண்ணீரையும் கடந்து வரும் போது
நான் உன்னை ஏந்திடுவேன்
– திகையாதே