நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் பிள்ளை அடிமை இல்லை

Naan Pillai Atimai Illai

Thomas Prithvi

நான் பிள்ளை அடிமை இல்லை

இராஜாதி இராஜாவின் செல்லபிள்ளை

பயம் எனக்கு இல்லை கவலை இல்லை

சர்வவல்ல தேவன் எனது தந்தை

ஆளுகை தந்தார் ஆதாமுக்கு அதை

விற்று போட்டான் பாவத்திற்கு

இரையாய் விழுந்தான் சாபத்திற்கு மனிதன்

மேல் ஆளுகை வந்தது சாத்தானுக்கு

– நான் பிள்ளை

இயேசு வந்தார் உலகத்திற்கு

முழுவதுமாய் நம்மை மீட்பதற்கு

நன்மைகள் செய்தார் ஜனங்களுக்கு அது

மிகவும் பிடிக்கும் என் இயேசுவுக்கு

– நான் பிள்ளை

பாடுகள் பட்டார் என் பாவத்திற்கு கோர

சிலுவயை சுமந்தார் கல்வாரிக்கு

சாபமானார் என்னை உயர்த்துவதற்கு தனது

இரத்தம் சிந்தினார் என்னை மீட்பதற்கு

– நான் பிள்ளை

மரணத்தை ஜெயித்தார் உயிர்த்தெழுந்து

விடுதலை தந்தார் மக்களுக்கு

மீண்டும் ஆளுகை தந்தார்

மீட்டெடுத்து நான்

மிகப்பெரிய தலைவலி சாத்தானுக்கு

– நான் பிள்ளை