நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் பாவிதான் ஆனாலும்

Naan Paavithaan Aanaalum

Chandrasekaran

நான் பாவிதான் ஆனாலும்

நீர் இரத்தம் சிந்தினீர்

இன்று உம் பிள்ளை நான்

இயேசய்யா இன்று

உம் பிள்ளை நான்

கல்வாரியின் மலைமீதிலே

உம் பாடுகள் எனக்காகத்தான் – 2

உம் கை காலிலே காயமெல்லாம்

நான் செய்த பாவமையா – 2

– நான்

கன்னங்களில் வழிந்தோடிடும்

கண்ணீரும் எனக்காகத்தான்

உம் கை காலிலே வழிந்தோடிடும்

திரு இரத்தம் எனக்காகத்தான் – 2

– நான்

மூன்றாணியால் என் பாவங்கள்

சுமந்து தீர்த்தீரையா

மூன்றாம் நாளில் எனக்காகவே

உயிரோடு எழுந்தீரையா – 2

– நான்