நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் பாடவில்லை என் நாவிலிருந்து இயேசு நாதம் எழுகின்றது

Naan Paadavillai En Naavilirunthu Yesu Naatham Elukintathu

Sirkali Yesuprakasam

நான் பாடவில்லை என்

நாவிலிருந்து இயேசு நாதம் எழுகின்றது

என் ஊண் ஆடவில்லை உள்ளுக்குள்

இருந்து கர்த்தர் உத்தரவு பிறக்கின்றது

தேன் இனிக்கவில்லை ஒரு

திரவத்திலிருந்து தேவன்

வார்த்தை இனிக்கின்றது

தென்றல் வீசவில்லை

திசைகளெல்லாம் ஜீவ

சுவாசம் தவழ்கின்றது

சுவாசம் தவழ்கின்றது

– நான் பாடவில்லை

தண்ணீரை தித்திக்கும்

ரசமாக்கிய நீர் தயபரும்

கிருபைக்கு இணையில்லையே

கண்ணீரை களிப்பாக்கும்

கர்த்தர் இயேசுவை காலமெல்லாம்

போற்றிப் பாடும் வரம் இன்றாரே

காலமெல்லாம்

போற்றிப் பாடும் வரம் இன்றாரே

– நான்

தூதர் சேனை போற்றிப்

பாடும் தூயர் இயேசுவை

துதி தன்னில் வாசம்

செய்யும் தேவ தேவனை

ஆவியோடும் கருத்தோடும்

பாடு நித்தமே அழைத்தவர்

நடத்துகின்றார் அவர் சித்தமே

அழைத்தவர்

நடத்துகின்றார் அவர் சித்தமே

– நான்