பாடல்
நான் கிறிஸ்துவோடு
Naan Kiristhuvodu
Chandrasekaran
நான் கிறிஸ்துவோடு
கூடவே சிலுவையில்
அறையப்பட்டேன்
ஆனாலும் ஜீவிக்கிறேன் இனி
நான் அல்ல அவரேயெல்லாம் - 2
என்னில் அன்புகூர்ந்து
எனக்காய் ஜீவன் தந்த
இயேசு கிறிஸ்துவையே
என்னாலும் பாடுவேன்
அவர் என் வாழ்வில் ஜீவனே
என்றுமே அவர் என் வாழ்வில் ஜீவனே
– நான் கிறிஸ்துவோடு
ஜீவ வசனம் பிடித்து
சுடராய் பிரகாசிப்பேன்
தேசம் எங்கும் அவரை
உயர்த்தி கொண்டாடுவேன்
தனிமை எனக்கு இல்லை – என்றுமே
தனிமை எனக்கு இல்லை
– நான் கிறிஸ்துவோடு
இலாபம் யாவும் அவர்க்காய்
நஷ்டமாய் எண்ணுகிறேன்
அவரை அறியும் அறிவை
இலாமபாக நினைக்கிறேன்
இயேசுவின் அன்பு போதுமே-என்றுமே
இயேசுவின் அன்பு போதுமே
– நான் கிறிஸ்துவோடு