பாடல்
நான் காணாமல் போன ஆடல்லவா
Naan Kaannaamal Pona Aadallavaa
நான் காணாமல் போன ஆடல்லவா
கர்த்தர் என்னைத் தேடி வந்தார் – 2
ஆதாமை போல ஆண்டவர் வார்த்தையை
அன்று மீறி நான் நடந்தேன்
ஆதாம் தந்த காயீனைப் போல
மனுக்கொலை நான் புரிந்தேன்
ஆரம்பம் முத்லே பாவத்தில் விழுந்தேன்
அன்பர் என்னை தேடி வந்தார்
– நான்
கைநீட்டி என்னை காப்பாற்றி இழுத்தார்
காட்டித் தந்த யூதாஸ் ஆனேன்
கல்வாரி சிலுவையை கர்த்தருக்கு தந்து
பெரும்பழி நான் சுமந்தேன்
கல்லோடு முள்ளில் கால் பின்னிக் கிடந்தேன்
கர்த்தர் என்னை தேடி வந்தார்
– நான்