பாடல்
நாம் இல்லற வாழ்வில் இணைந்தோம்
Naam Illara Vaalvil Innainthom
Chandrasekaran
நாம் இல்லற வாழ்வில் இணைந்தோம்
இருவர் ஒருவரானோம்
வாரும் தேவனே ஆசீர் கூறிட
வாரும் தேவனே ஆசீர் கூறிட
இன்பத்திலும் துன்பத்திலும்
இணைந்தே வாழ்ந்திடுவோம்
கர்த்தர் முன்னே கொடுத்த வாழ்க்கை
கடைசிவரை காப்போம்
– நாம் இல்லற
பூமியில் வாழும் நாட்களெல்லாம்
அவர் பணி செய்திடுவோம்
கர்த்தர் கொடுக்கும் பிள்ளைகளை
அவர்க்காய் வளர்த்திடுவோம்
– நாம் இல்லற
சீயோன் மணவாளன் வருகின்றார்
ஆயத்தமாகிடுவோம்
நம்மையும் அவருடன்
சேர்த்து கொள்ளுவார்
அன்பில் அகமகிழ்வோம்
– நாம் இல்லற