முத்திரை முத்திரை ஏழு முத்திரை
Muththirai Muththirai Aelu Muththirai
Ravi Bharath
முத்திரை முத்திரை ஏழு முத்திரை
இவைகளை திறப்பது யாரது
இயேசு கிறிஸ்து தான் அது
வெள்ளைக் குதிரையில் ஒருவன்
அந்தி கிறிஸ்து அவன்
ஜெயிக்க வரும் ஒருவன்
ஜனங்களை வஞ்சிப்பவன்
போலியாய் பலர் வந்து போவார்
எச்சரிக்கை வேண்டும்
வேதம் சொல்வதை நன்கு அறியவேண்டும்
இது முத்திரை முதல் முத்திரை
சிவப்பு குதிரையில் ஒருவன்
அதிகாரம் கொண்டவன்
பட்டயம் கையில் கொண்டவன்
பலரை கொல்லும் ஒருவன்
யுத்த செய்திகள் கேட்கும் போது
எச்சரிக்கை வேண்டும்
இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டும்
இந்த முத்திரை இரண்டாவது
கருப்பு குதிரையில் சவாரி செய்து
ஒருவன் வருகின்றான்
தராசை கையில் ஏந்திக்கொண்டு
அவனே வருகின்றான்
பூமியெங்கும் பஞ்சம் உண்டாகும்
பட்டினியாலே துன்பம் உண்டாகும்
இந்த முத்திரை முன்றாவது
நாலாம் முத்திரை உடைத்த போது
மங்கின நிறமுள்ள குதிரை
மரணம் என்பது அவனது நாமம்
மேற்கொள்தே பறவை
பஞ்சத்தாலும் போரினாலும்
பூமி அதிர்ந்ததாலும்
கொள்ளை நோயின் பிடியினாலும்
மரணம் மேற்கொள்ளும் மனிதனை
மரணம் மேற்கொள்ளும்
– முத்திரை
ஐந்தாம் முத்திரை உடைத்த போது
பலி பீடத்தின் கீழே
இரத்த சாட்சியாய் மாண்ட மாந்தரின்
விண்ணப்பம் சென்றது மேலே
தேவனை தொழுதிடும் ஆத்துமாக்களை
உலகம் பகைத்திடும்
கர்த்தரே தேவன் என்று கூறினால்
கொலையே செய்திடும்
ஆறாம் முத்திரை உடைத்த போது
பூமியும் அதிர்ந்ததே
சூரியன் கருத்து சந்திரன் சிவந்து
விண்மீன் விழுந்ததே
மனுஷ குமாரரின் அடையாளங்கள்
விண்ணில் தெரியுது பார்
மன்னாதி மன்னர் வருவதைப்
பார்த்து மனிதர் புலம்பிடுவார்
இறுதி முத்திரை உடைந்தது
பரலோகில் அமைதி நிலவியது
பூமியின் நியாய தீர்ப்புக்கு
ஆயத்தமாகும் ஒரு அமைதி அது….
– முத்திரை