மரித்தாலும் பிழைப்பான் அன்றோ
Mariththaalum Pilaippaan Anto
Moses Rajasekar
மரித்தாலும் பிழைப்பான்
அன்றோ – நீதிமான்
பிழைத்தாலும் துதிப்பான் அன்றோ – 2
தேவ தேவனை
தீங்குகள் வரும்போது தேவனை நினைத்திடு
பாடுகள் வரும்போது பரமனை பாடிடு – 2
கண்ணீர் வரும்போது…
நிரிச…தசநி … பநித… கமததமநிச
கண்ணீர் வரும்போது…
கர்த்தரை நினைத்திடு
இகமதிலே அவர் துணையை
நினைத்து நினைத்து
துதித்திட ஜெபம் வருமே
– மரித்தாலும்
கட்டுகள் தனை அறுத்து
கவலைகள் போக்கின
நித்திய தேவனாம் நிமலனை நினைத்திடும்
சத்திய குருவான…
நிரிச…தசநி … பநித… கமததமநிச
சத்திய குருவான சரித்திர நாயகனை
துயில் எழுந்த தன்னை மறந்து
துதித்து துதித்து பாடிட ஜெயம் வருமே
– மரித்தாலும்
ஆசீர்வாத ஊற்றுகளை
அளவின்றி திறப்பவரை
நாசியில் சுவாசம் உள்ள மட்டும் துதித்திடு
மாம்ச தேகம் உள்ள…
ஆ…
மாம்ச தேகம் உள்ள
யாவருக்கும் கர்த்தர் அவர்
நல்லவரை வல்லவரை
புகழ்ந்து புகழ்ந்து
துதித்திட ஜெபம் வரும்
– மரித்தாலும்