நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மரண பள்ளதாக்கில் நடந்தாலும்

Marana Pallathaakkil Nadanthaalum

Thomas Prithvi

மரண பள்ளதாக்கில் நடந்தாலும்

பொல்லாப்புக்கு பயப்படேன்

தேவரீர் என்னோடு இருக்கிறீர்

என்னை விட்டு நீர் விலகுவதில்லை

என்னை நீர் கைவிடுவதில்லை

உம்மால் நான் என்றும்

மறக்கப்படுவதில்லை

உந்தன் மனதில் இருப்பவன் நானே

உந்தன் உள்ளங்கையில் நானே

உந்தன் கண்ணின்

கண்மணி நானே

ஓடிப்போய் ஒளிய கோழை நான் அல்ல

பயந்து நடுங்க பெலவீனன் அல்ல

உடன்படிக்கை உடைய ராஜா நானே

ஓடிப்போய் ஒளிய கோழை நான் அல்ல

பயந்து நடுங்க பெலவீனன் அல்ல

உடன்படிக்கை உடைய ராஜா நானே

உம்மால் நான் ஒரு

சேனைக்குள் பாய்வேன்

எந்த மதிலையும்

துதித்து தாண்டுவேன்

வெண்கல வில்லையும் முறிப்பேன்

எனக்காய் யுத்தம்

செய்பவர் என்னோடே

ராஜாதி ராஜா என்னோடே

சேனைகளின்

கர்த்தர் என்றும் என்னோடே

விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர்

அணைத்து சேர்த்துக் கொண்டீர்

உந்தன் கிருபை வியக்கும் கிருபையே

விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர்

அணைத்து சேர்த்துக் கொண்டீர்

உந்தன் கிருபை வியக்கும் கிருபையே

தகுதியில்லா என்மேல்

உந்தன் இரக்கம்

தகுதியில்லா என்மேல்

உந்தன் உருக்கம்

அதுவே என்மேல்

இருக்கும் உந்தன் கிருபை

தகுதியில்லா என்மேல்

உந்தன் தயவு

தகுதியில்லா என்மேல்

உந்தன் பரிவு

அதுவே என்மேல்

இருக்கும் உந்தன் கிருபை