பாடல்
மணவாட்டியே என் சபையே
Manavaattiyae En Sapaiyae
மணவாட்டியே என் சபையே
விழித்தெழு சீயோன் திருச்சபையே
உன்னில் மகிமை அடைந்திடவே
உன்னை பூவினில் கண்டெடுத்தேன்
உள்ளான அழகு என் பிரியம்
உபதேசத்தில் நிலைத்திருப்பாய்
என் பிரியமே ரூபவதி
உன்னில் நான் மகிழ்ந்திடுவேன்
– மணவாட்டியே
கூர்மையும் புதிதும் யந்திரமாய்
மலைகளை நொறுக்கிடுவாய்
தகர்த்திடுவாய் குன்றுகளை
பாதாள வாசல்கள் மேற்கொள்ளாதே
– மணவாட்டியே
உந்தனின் கிரியை நான் அறிவேன்
உண்மையாய் ஊழியம் செய்திடுவாய்
ஜனம் தருவேன் ஜெயம் தருவேன்
உன்னை நான் கனம் பண்ணுவேன்
– மணவாட்டியே