நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

மனம் போன பாதையை தான் மறந்தேன்

Manam Pona Paathaiyai Thaan Maranthaen

Sirkali Yesuprakasam

மனம் போன பாதையை நான் மறந்தேன்

இயேசு மாதேவன் அன்பினை நான் உணர்ந்தேன்

என் அரும் இயேசுவின் பாதம் பணிந்தேன்

எண்ணில்லா நன்மைகள் நான் அடைந்தேன்

கானல் நீரை நம்பியதாலே

கன்மலைத் தேனை நான் இழந்தேனே

ஜீவத்தண்ணீராம் இயேசு என்னை

தேடியே வந்தார் தேற்றியே அணைத்தார்

ஆறுதல் ஈந்து ஆனந்தம் தந்தார்

– மனம்

உலகத்தின் நேசம் தேவனின் பகையன்ற

உண்மையை உணர்ந்தேன் நன்மையை நான் அடைந்தேன்

உன்னதர் இயேசு என்னிடம் வந்தார்

உலகம் தராத சமாதானம் தந்தார்

– மனம்

நாசினில் சுவாசமுள்ள மனிதனை நம்பியதால்

நாணிலம் மீதில் நான் நடைபிணமானேன்

இயேசுவின் மேல் விசுவாசம் பயந்ததால் பிழைத்தேன்

என் அரும் இயேசு என்னைத் தேடி வந்தார்

இணையில்லா நிம்மதி இதயத்தில் தந்தார்

– மனம்