பாடல்
மலையோர வெயிலும்
Malaiyora Veyilum
Moses Rajasekar
மலையோர வெயிலும்
மாலை மயங்கும் நேரத்தில் (2)
மணவாளன் இயேசு வந்தாராம் – என் மகராசன்
மணவாளன் இயேசு வந்தாராம் – ஒ என்னை காண
மணவாளன் இயேசு வந்தாராம்
– மலையோர – ஒ …
கல்லு முள்ளு பாதையில
காஞ்ச முள்ளு குத்தையில (2)
பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு –
என் அன்பு ராசன் (2)
பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
அவர் என்னை தூக்கி
பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
(மலையோர)
வனாந்திர பாதையில
நா வரண்டு நான் போகையில (2)
தாகத்துக்கு தண்ணீர் தந்தாரு என் அன்பு ராசன்
கன்மலை நீருற்றானாரு (2)
(மலையோர)
அழுகையின் பாதையில
அழுது நான் புலம்பையில (2)
அழாதே என்று சொன்னாரு – என் அன்பு ராசன்
வாழ வைப்பேன் என்று சொன்னாரு –
என் கண்ணுமணி
வாழவைப்பேன் என்று சொன்னாரு
(மலையோர)