பாடல்
மலைகள் விலகிப் போனாலும்
Malaikal Vilakip Ponaalum
Reegan Gomez
மலைகள் விலகிப் போனாலும்
மகிழ்ந்து பாடுவேன்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
துதித்து பாடுவேன்
எந்தன் இயேசு என்னை
கைவிடமாட்டார்
இயேசு என்னை மறந்திட மாட்டார்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – என்
அன்பரைத் துதித்துப் பாடுவேன்
தண்ணீர்களை கடந்தாலும்
சோர்ந்திட மாட்டேன்
அக்கினியில் நடந்தாலும்
அழுதிட மாட்டேன்
எந்தன் இயேசு என்னை சுமந்திடுவாரே
இயேசு என்னை ஆதரிப்பாரே
– ஆராதிப்பேன்
மரணமோ நாசமோ
பயப்பட மாட்டேன்
துன்பமோ தொல்லையோ
கலங்கிட மாட்டேன்
எந்தன் இயேசு என்னை காத்திடுவாரே
இயேசு என்னை நடத்திடுவாரே
– ஆராதிப்பேன்
செங்கடலோ யோர்தானோ
முன்னே வந்தாலும்
எரிகோவின் கோட்டைகள்
முன்னே வந்தாலும்
எந்தன் இயேசு எனக்கு ஜெயம் தருவாரே
இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வாரே
– ஆராதிப்பேன்