பாடல்
மாயை மாயை எல்லாம் மாயை
Maayai Maayai Ellaam Maayai
K.S. Vincent
மாயை மாயை எல்லாம் மாயை
வானத்தின் கீழே பூமிக்கு மேலே
எல்லாம் மாயை – இந்த
அன்பு இல்லா உலகத்தில்
வாழ்கின்ற மனிதனை
அன்பை தேடியே
அங்கும் இங்கும் ஓடாதே
ஏசு என்ற தெய்வத்தின்
அன்பு ஒன்று போதுமே
– மாயை
பொன்பொருள் சுகங்கள் எல்லாம்
ஒரு நாள் அழிந்துவிடும்
பொல்லாத உலகத்தின் செல்வம் எல்லாம்
அழிந்துவிடும்
சொந்தங்களும் பந்தங்கள் எல்லாம்
ஒரு நாள் மாறிவிடும்
பாசங்களும் நேசங்கள் எல்லாம்
ஒரு நாள் மாறிவிடும்
– மாயை
நம்பினோர் எல்லோரும்
ஒரு நாள் கைவிடுவார்
நம்பிக்கையின் நாயகன்
ஏசு உன்னை கைவிடமாட்டார்
கல்வாரி நாயகன்
ஏசுவிடம் வந்துவிடு
காலமில்ல நேரமில்ல
அன்புக்குள்ளே வந்துவிடு
– மாயை
வாலிப உள்ளமே சீக்கிரம் மனம் திரும்பு
வாலிப நாட்களில் ஏசுவிடம் வந்துவிடு
ராஜாதி ராஜா ஏசு சீக்கிரம் வருகின்றார்
ராஜாவை சந்திக்க நீயும் ஆயத்தப்படு
– மாயை