பாடல்
மாறிடா எம் மாநேசரே
Maaridaa Em Maanaesarae
மாறிடா எம் மாநேசரே ஆ...
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே காணுதே
இம்மா அன்பிதே
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணையேதும் வேறில்லையே
– ஆ! இயேசுவின்
பாவியாக இருக்கையிலே அன்பாய்
பாரில் உன்னைத்தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே
– ஆ! இயேசுவின்
உள்ளத்தால் அவரை தள்ளினும்
தம் உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே
ஆவியால் அன்பை பகர்ந்திட
தூய தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க
– ஆ! இயேசுவின்