பாடல்
மான்கள் நீரோடையை வாஞ்சித்து
Maankal Neerotaiyai Vaanjiththu
Chandrasekaran
மான்கள் நீரோடையை வாஞ்சித்து
அலைவது போல்
எந்தன் ஆத்துமா தேவா
உம்மை நாடுது – 2
கடந்த காலங்களிலெல்லாம்
உம் சமூகத்தில் மகிழ்ந்திருந்தேன்
இன்று உம்மை எதிர்ப்பார்த்து
மனச்சோர்வால் வாடுகிறேன்
என் ஆத்துமாவே
ஏன் கலங்குகிறாய்
உன் தேவனை நோக்கி கூப்பிடு
– மான்கள்
இரவும் பகலும் எந்தன் கண்ணில்
கண்ணீர் வழிவதேன்
அமைதி தேடி நான் இன்று
எங்கே ஓடுவேன்
என் ஆத்துமாவே
ஏன் கலங்குகிறாய்
உன் தேவனை நோக்கி கூப்பிடு
– மான்கள்
உன் மேவன் எங்கே என்று தினமும்
என் பகைவன் கேட்கிறான்
நானோ உம்மை எதிர்ப்பார்த்து
மனச் சோர்வால் வாடுகின்றேன்
என் ஆத்துமாவே
ஏன் கலங்குகிறாய்
உன் தேவனை நோக்கி கூப்பிடு
– மான்கள்