நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கொல்கதா என்றாலே கொலை நடுங்குது

Kolkathaa Entalae Kolai Nadunguthu

Sirkali Yesuprakasam

கொல்கதா என்றாலே கொலை நடுங்குது

மனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது

எப்படி தான் மனித கரங்களும்

புனித தலையை கொட்டத் துணிந்ததோ

அப்படியே அவர் கன்னங்களில் அறைய

எப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோ

அய்யோ கதறுகின்றாரே அவர் கன்னங்கள் சிவந்திடவே

மரியாள் முத்தமிட்ட மாசற்ற கால்கள்

பெருதொரு ஆணியினால் குருசில் என்றதே

வா என்ற அழைத்த அன்பின் கரங்கள் நோகவே

பெரிதொரு ஆணியால் குருசி என்றதே

அப்பா அங்கே குருசினில் பாவியை நோக்கி

இப்பாவியை நினைத்தீர்

– கொல்கதா

நிலமெல்லாம் நின் இரத்தம் கொட்டி விட்டதே

எலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதே

இடும்பையின் கடலிலே இறங்கி விட்டீர் இயேசுவே

கொடும்பாவி என்னை தீக்கடலில் மீட்கவே

என் பாவம் மாபெரிது மன்னியும் இயேசு நாதா

புசியாது நின் வயிறு ஒட்டிப் போனதே

பசியினால் நின் உடல் வாடி வதங்கிற்றே

அடியினால் உம் தேகம் உருகுலைந்ததே

வடிவது மாறி உடல் கோரமானதே

என்னழகே என்னால் உம் அழகிழந்தீரே

– கொல்கதா