கொல்கதா என்றாலே கொலை நடுங்குது
Kolkathaa Entalae Kolai Nadunguthu
Sirkali Yesuprakasam
கொல்கதா என்றாலே கொலை நடுங்குது
மனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது
எப்படி தான் மனித கரங்களும்
புனித தலையை கொட்டத் துணிந்ததோ
அப்படியே அவர் கன்னங்களில் அறைய
எப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோ
அய்யோ கதறுகின்றாரே அவர் கன்னங்கள் சிவந்திடவே
மரியாள் முத்தமிட்ட மாசற்ற கால்கள்
பெருதொரு ஆணியினால் குருசில் என்றதே
வா என்ற அழைத்த அன்பின் கரங்கள் நோகவே
பெரிதொரு ஆணியால் குருசி என்றதே
அப்பா அங்கே குருசினில் பாவியை நோக்கி
இப்பாவியை நினைத்தீர்
– கொல்கதா
நிலமெல்லாம் நின் இரத்தம் கொட்டி விட்டதே
எலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதே
இடும்பையின் கடலிலே இறங்கி விட்டீர் இயேசுவே
கொடும்பாவி என்னை தீக்கடலில் மீட்கவே
என் பாவம் மாபெரிது மன்னியும் இயேசு நாதா
புசியாது நின் வயிறு ஒட்டிப் போனதே
பசியினால் நின் உடல் வாடி வதங்கிற்றே
அடியினால் உம் தேகம் உருகுலைந்ததே
வடிவது மாறி உடல் கோரமானதே
என்னழகே என்னால் உம் அழகிழந்தீரே
– கொல்கதா