பாடல்
கிருபாசனதண்டை ஓடி வந்தேன்
Kirupaasanathanntai Oti Vanthaen
Johnsam Joyson
கிருபாசனதண்டை ஓடி வந்தேன்
கிருபையாய் இரங்கிடுமே
தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே
தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிரைத்திடுமே
உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர்
என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர்
உம் பெலத்தால் எல்லாம் செய்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே
சோதனைகள் தாங்க பெலனில்லை
அதை நீர் நன்றாய் அறிவீர்
சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
உம் கிருபையால் நிரைத்திடுமே
– கிருபாசனதண்டை