நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை

Kattip Pitiththaen Unthan Paathaththai

Fr. S. J. Berchmans

கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை

கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே

இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே

இளைஞரெல்லாம் இயேசுவுக்காய்

வாழ வேண்டுமே

இரங்கும் ஐயா மனம்

இரங்குமையா

இரங்கும் ஐயா மனம்

இரங்குமையா

துப்பாக்கி ஏந்தும் கைகள் – உம்

வேதம் ஏந்த வேண்டும்

தப்பாமல் உம் விருப்பம்

எப்போதும் செய்ய வேண்டும்

– இரங்கும்

பழிக்கு பழி வாங்கும்

பகைமை ஒழிய வேண்டும்

மன்னிக்கும் மனப்பான்மை

தேசத்தில் மலர வேண்டும்

– இரங்கும்

பிரிந்த குடும்பமெல்லாம்

மறுபடி இணைய வேண்டும்

பெற்றோரின் கண்ணீர் எல்லாம்

களிப்பாய் மாற வேண்டும்

– இரங்கும்