பாடல்
கடைசி நாட்களிலே
Kataisi Naatkalilae
கடைசி நாட்களிலே
கடாட்சிக்கும் தேவன் அவர்
மாமிசமானவர் யாவரின் மேலும்
மாரியைப் பொழிவேன் என்றார் – அருள்
மாரியைப் பொழிவேன் என்றார்
– கடைசி
பெருமழையின் இரைச்சல்
பெருந்தொனியாய் முழங்க
பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே
அருள்மாரி பொழியும் என்றார்-இன்று
அருள்மாரி பொழியும் என்றார் – 2
– கடைசி
தரிசனம் கண்டிடுவார்
கரிசனை உள்ளோரெல்லாம்
பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார்
மாரிதனைக் கண்டபின் – அருள்
மாரிதனைக் கண்டபின்
– கடைசி
முழங்காலில் நின்றோரெல்லாம்
முழங்கிடுவார் அன்று
முழங்கால்கள் மடங்கும்
இயேசுவின் நாமம்
தளங்களை நிரப்பி விடும் – பணித்
தளங்களை நிரப்பி விடும்
– கடைசி
இந்தியாவின் மண்ணிலே
சிந்திய கண்ணீரெல்லாம்
பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே
தந்தோரை எழுப்பிவிடும் – தம்மை
தந்தோரை எழுப்பிவிடும்
– கடைசி