நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கடைசி நாட்களிலே

Kataisi Naatkalilae

கடைசி நாட்களிலே

கடாட்சிக்கும் தேவன் அவர்

மாமிசமானவர் யாவரின் மேலும்

மாரியைப் பொழிவேன் என்றார் – அருள்

மாரியைப் பொழிவேன் என்றார்

– கடைசி

பெருமழையின் இரைச்சல்

பெருந்தொனியாய் முழங்க

பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே

அருள்மாரி பொழியும் என்றார்-இன்று

அருள்மாரி பொழியும் என்றார் – 2

– கடைசி

தரிசனம் கண்டிடுவார்

கரிசனை உள்ளோரெல்லாம்

பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார்

மாரிதனைக் கண்டபின் – அருள்

மாரிதனைக் கண்டபின்

– கடைசி

முழங்காலில் நின்றோரெல்லாம்

முழங்கிடுவார் அன்று

முழங்கால்கள் மடங்கும்

இயேசுவின் நாமம்

தளங்களை நிரப்பி விடும் – பணித்

தளங்களை நிரப்பி விடும்

– கடைசி

இந்தியாவின் மண்ணிலே

சிந்திய கண்ணீரெல்லாம்

பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே

தந்தோரை எழுப்பிவிடும் – தம்மை

தந்தோரை எழுப்பிவிடும்

– கடைசி