நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கசந்த மாரா மதுரமாகும்

Kasantha Maaraa Mathuramaakum

கசந்த மாரா மதுரமாகும்

வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்

கண்ணீரோடு நீ விதைத்தால்

கெம்பீரமாய் அறுத்திடுவாய்

இன்று கண்ட எகிப்தியனை

என்றுமே இனி காண்பதில்லை

இஸ்ரவேலை காக்கும் தேவன்

உறங்கவில்லை தூங்கவில்லை

தண்ணீர்களை கடக்கும் போது

கண்ணீரை அவர் துடைத்திடுவார்

வெள்ளம் போல சத்துரு வந்தால்

ஆவியால் கொடியேற்றிடுவார்

– இன்று

வாதை உந்தன் கூடாரத்தை

அணுகாமலே காத்திடுவார்

பாதையிலே காக்கும் படிக்கு

தூதர்களை அனுப்பிடுவார்

– இன்று

சோர்ந்து போன உனக்கு அவர்

சத்துவத்தை அளித்திடுவார்

கோரமான புயல் வந்தாலும்

போதகத்தால் தேற்றிடுவார்

– இன்று