பாடல்
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
Karththarai Thaetina Naatkalellaam
Fr. S. J. Berchmans
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
காரியம் வாய்க்கச் செய்தாரே
எத்தனை எத்தனை நன்மைகளோ
இயேசப்பா செய்தாரே-நான்
இறுதிவரை என் வாழ்வு
இயேசப்பா உமக்குத்தானே – 2
கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
இஸ்ரயேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்க மாட்டார்
– இறுதி
கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார்
பகலினிலும், இரவினிலும்
பாதுகாக்கின்றார்
– இறுதி
போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போதும், எப்போதும்
எந்நாளும் காத்திடுவார்
– இறுதி