பாடல்
கர்த்தரை நம்பிடுங்கள்
Karththarai Nampidungal
Fr. S. J. Berchmans
கர்த்தரை நம்பிடுங்கள் அவர்
கைவிடவே மாட்டார் அவர்
கைவிடவே மாட்டார்
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்
என்றே கவலைப்படல் வேண்டாம்
உணவை விட உயிரும்
உடையை விட உடலும்
உயர்ந்தவை அல்லவா
வானத்துப் பறவையைப் பாருங்கள் – அவை
விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
சேர்த்து வைப்பதுமில்லை
கர்த்தர் காக்கின்றார்
– கர்த்தரை
கவலைப்படுவதினால்
எவன் தன் வளர்த்தியிலே
ஒரு முழம் கூட்ட முடியும்
எதை உடுப்போம் என்று
கவலையே வேண்டாம்
சொல்வதைக் கேளுங்கள்
வயல்வெளி மலர்களைப் பாருங்கள் – அவை
உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
கவலைப்படுவதுமில்லை
கர்த்தர் உடுத்துகின்றார்
– கர்த்தரை