நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கர்த்தர் மேல் நம்பிக்கை

Karththar Mael Nampikkai

Joseph Aldrin

கர்த்தர் மேல் நம்பிக்கை

வைக்கும் மனுஷன் நான்

கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட

மனுஷன் நான்

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்

அவரே என்னை ஆதரிப்பார்

கர்த்தரையே நான் நம்பிடுவேன்

ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்

உஷ்ணம் வருவதை பாராமல்

என் இலைகள் பச்சையாய் இருக்கும்

மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்

வருத்தமின்றி கனி கொடுக்கும்

என் வேர்கள் தண்ணீருக்குள்

என் நம்பிக்கை இயேசுவின் மேல்

– கர்த்தர் மேல்

நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு

என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்

இலையுதிரா மரம் போல் இருப்பேன்

நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்

உம் வேதத்தில் பிரியம் கொண்டு

அதை இராப்பகல் தியானிப்பதால்

– கர்த்தர் மேல்

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை

என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்

புத்திமானாய் நடந்து கொள்வேன்

என் வாய்விட்டு பிரிவதில்லை

அதை தியானிக்க மறப்பதில்லை

– கர்த்தர் மேல்