நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கண் கலங்காமல் காத்தீரய்யா

Kann Kalangaamal Kaaththeerayyaa

Fr. S. J. Berchmans

கண் கலங்காமல் காத்தீரய்யா

கால் இடறாமல் பிடித்தீரய்யா

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

உம்மோடு கூட நடந்திடுவேன்

உம்மோடு கூட நடந்திடுவேன்

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

ஏனோக்கு நடந்தான் உம்மோடு கூட

எடுத்துக் கொண்டீரய்யா

பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போது

மகிமையின் கிரீடம் என் தலைமேல்

– உயிரோ

நோவா நடந்ததால் உம் கண்களில்

கிருபை கிடைத்ததையா

குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி

வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா

– உயிரோ

ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட

சிநேகிதன் என்றழைத்தீர்

செய்யப்போவதை மறைப்பேனோ என்று

தெரிவித்தீர் உமது திட்டங்களை

– உயிரோ

உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா

விண்ணப்பம் கேட்டிரையா

கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று

விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்

– உயிரோ