பாடல்
கண் கலங்காமல் காத்தீரய்யா
Kann Kalangaamal Kaaththeerayyaa
Fr. S. J. Berchmans
கண் கலங்காமல் காத்தீரய்யா
கால் இடறாமல் பிடித்தீரய்யா
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
ஏனோக்கு நடந்தான் உம்மோடு கூட
எடுத்துக் கொண்டீரய்யா
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போது
மகிமையின் கிரீடம் என் தலைமேல்
– உயிரோ
நோவா நடந்ததால் உம் கண்களில்
கிருபை கிடைத்ததையா
குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா
– உயிரோ
ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சிநேகிதன் என்றழைத்தீர்
செய்யப்போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை
– உயிரோ
உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டிரையா
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்
– உயிரோ