பாடல்
கல்வாரி காட்சியை காணாத கண்களும் கண்களல்ல
Kalvaari Kaatchiyai Kaannaatha Kannkalum Kannkalalla
Sirkali Yesuprakasam
இதயம் என்று ஒரு இருந்தாலே நீ
இயேசுவை மறந்திட முடியுமா
எதையும் தாங்கும் நல் இதயம் கொண்ட
இயேசு இன்றி நம் வாழ்வு விடியுமா
விடியுமா நற்கதி அடையுமா
– இதயம்
ஆதியில் வார்த்தையாய் இருந்த தேவன்
மாம்சத்தில் வந்த இயேசு ஆனார்
ஆவியாய் இருந்த தேவன் அவர் ஈன
பாவியை காக்க பலியானார்
அநீதி இருள் தனில் வாழ்வோர்க்கு
இயேசு நீதியின் சூரியன் வழியானார்
– இதயம்
மகிமையின் ஒளியாய் இருந்த தேவன்
பாவி மனிதனை மீட்க மனிதனானார்
மனித மீறுதலின் நிமித்தம் இயேசு காயப்பட்டார்
மாந்தர் அக்கிரமங்கள் நிமித்தம் இயேசு நொறுக்கப்பட்டார்
அவமான நிந்தையை அவர் அடைந்து
சமாதான வாழ்வை நமக்குத் தந்தார் (இயேசு)
– இதயம்