பாடல்
கல்வாரி காட்சி சிந்திக்குமா உன் மனசாட்சி
Kalvaari Kaatchi Sinthikkumaa Un Manasaatchi
Sirkali Yesuprakasam
கல்வாரி காட்சி சிந்திக்குமா
உன் மனசாட்சி கனிவுள்ள
இயேசு சிலுவையை தூக்கி
கல்வாரி நோக்கி தவழ்கின்ற காட்சி
கரடு முரடான கபால ஸ்தலம் நோக்கி
முகமே நீர் வாடி கெத்சமனே
வேண்டுகையில் முக வேர்வை
இரத்தமாக மாகி
விரோதிகளும் தனை சூழ ஏரோதின்
கைதியாகி காவலர்கள் பிடித்திழுக்க
சிலுவையில் அறையும் என்று
யூதர்கள் முறையிட
சேவகர்கள் ஓங்கி அறைய
சிலுவை ஒன்றே தன் தோளில் ஏந்தி
தள்ளாடி தள்ளாடி தவிக்கின்ற காட்சி
– கல்வாரி
நலிந்தோர்க்கும் மீட்சி நல்கிய
கரங்கள் இரண்டும்
ஆணியால் கடாவும் காட்சி
ஒருபாவம் அறியாத பரிசுத்த
தேவனுக்கு முள்கிரீடம் சூடும் சூழ்ச்சி
சிலுவையில் தொங்கிட்ட
ஆவி பிரியும் முன்
தேன் போல திருவார்த்தை
மொழிகின்ற நற்சாட்சி
– கல்வாரி