நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

கடவுள் உண்டு தான் அதுவும் ஒன்று தான்

Kadavul Unndu Thaan Athuvum Ontu Thaan

Sirkali Yesuprakasam

கடவுள் உண்டு தான்

அதுவும் ஒன்று தான்

கற்பனையில் உருவாகும் கல்லும்

மண்ணும் கடவுளல்ல

மடமை என்று ஓர் மடத்தின்

மண்டபத்தின் மலை உச்சியில்

உடமையும் பொருள் கொடுத்து

முடியும் பண்டிகை கடவுளல்ல

கூழுக்கு வழியில்லா மக்கள்

விதி மட்கி மாளும் போது

ஆளுக்கொரு தெய்வம் என்று

நாளுக்கொரு சடங்குகள் ஏன்

உள்ளத்தின் அன்பாகி உலகத்தின்

ஒளியான எள்ளத்தும் களமில்லா

இயேசுவே கடவுள் என்போம்

– கடவுள்

பாவத்தை கண்ணீராக பருகுகின்ற

மாந்தர்களின் சாபத்தை தொலைப்பதற்கு

சாத்திரங்கள் என்ன செய்யும்

பாவத்தின் பலியாகி பரலோகம் வழியாகி

பாவத்தின் பலியாகி…. ஆ….

சிலுவையில் சாபம் தீர்த்த

இயேசுவே கடவுள் என்போம்

– கடவுள்