ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
Jothi Thontum Or Thaesamunndu
ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம் பிதா அழைக்கும் பொழுது
நாம் அங்கே வசிக்கச் செல்லுவோம்
இன்பராய் ஈற்றிலே – மோட்சக்
கரையில் நாம் சந்திப்போம்
இன்பராய் ஈற்றிலே – மோட்சக்
கரையில் நாம் சந்திப்போம்((2)
– இன்பராய்
அந்த வான் கரையில் நின்று நாம்
விண்ணோர் கீதங்களைப் பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரின் ஆறுதல் அடைவோம்
– இன்பராய்
நம் பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கி துதிப்போம்
– இன்பராய்
அந்த மோட்ச கரை அடைந்து
வான சேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம்
– இன்பராய்
சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம், பாடுவோம், ஆளுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
நலமாய் நாம் இளைப்பாறுவோம்
– இன்பராய்
அங்கே நம் இரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார்
– இன்பராய்
என் உற்றார் போய் விட்டார் முன் அங்கே
ஆயின் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஓய்வற்ற பேரின்பம் கொள்ளுவேன்
– இன்பராய்
ஏழைக்கும் மாளிகை இங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவர்க்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார்
– இன்பராய்