பாடல்
இதுவரை செய்த செயல்களுக்காக
Ithuvarai Seytha Seyalkalukkaaka
இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம்
இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம்
உவர் நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உண்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி(2)
– இதுவரை செய்த
தனி மரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உம்மை - திசைகளும்
கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கிட பாடுவேன் நன்றி
இன்னிசை முழங்கிட பாடுவேன் நன்றி
– இதுவரை செய்த
உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னை ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனையாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி.
– இதுவரை செய்த