பாடல்
இது தெரியாதா… கேட்டதில்லையா
Ithu Theriyaathaa… Kaettathillaiyaa
Albert Solomon
இது தெரியாதா… கேட்டதில்லையா
இது புரியாதா - கேட்டதில்லையா
பூமி முழுவதும் படைத்த தேவன்
களைப்படைவதில்லை
பாராட்டுகுரிய அறிவுள்ளவர்
சோர்ந்து போவதில்லை
இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்
வாலிபர்கள் தடுமாறி விழுந்து போவார்கள்
கர்த்தரை நம்பிடும் மனிதரிடம்
ஆற்றலும் சக்தியும் பெருகிடுதே
– இது
கர்த்தருக்கு காத்திருப்போர் புது பெலன் பெறுவார்கள்
கழுகு போல் சிறகடித்து உயர உயர பறப்பார்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார்
– இது
சோர்வுற்ற நேரங்களில் பெலன் கொடுத்து மகிழ்கின்றார்
வலிமையில் சமயங்களில் வல்லமை பெருக செய்கின்றார்
இரவும் பகலும் காக்கின்றார்
எந்நேரமும் காக்கின்றார்
– இது