நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இருள் சூழும் வேளையிலே நான்

Irul Soolum Vaelaiyilae Naan

Chandrasekaran

இருள் சூழும் வேளையிலே நான்

தடுமாறி வாழ்கிறேன்

என் இதயத்தின் பாரமெல்லாம்

உந்தன் பாதத்தில் இறக்கி

வைத்தேன்.

என் தேவா என்னைத்தாங்கும்

உந்தன் கிருபை வேண்டுமையா-2

என் தேவனே என் தேவனே – 2

ஏன் என்னை கைவிட்டீரே

கதறி சொல்லும் வார்த்தைகளை

கேளாமல் தூரம்போனீர்

– என் தேவா

நானோர் புழு மனுஷனல்ல

மனுஷரால் நிந்தையானேன்

ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு

நாள்தோறும் வாடுகிறேன்

– என் தேவா

சிங்கத்தை போல் என்னை சுற்றிலும்

சத்துருக்கள் வருகின்றன

தண்ணீரைப்போல் என்னுள்ளம்

கரைந்து என் எலும்புகள்

அசைகின்றதே

– என் தேவா